Subscribe

BREAKING NEWS

18 May 2017

எங்களின் ஓராண்டு பயணம்..

அன்புள்ள நல்ல உள்ளங்களுக்கு வணக்கம்.

வாழ்க்கை படகில் ஓடிக் கொண்டிருந்தேன். பல்வேறாய் தொண்டு செய்பவர்களுடன் அறிமுகம் கிடைத்தது. அன்ன தர்மம் செய்வது பற்றி நினைத்தேன். 

 rightmantra சுந்தர் என நட்பு வட்டத்தின் அனுபவம் உதவியுடன் என் அலுவலக நண்பர்கள் உதவியுடன் (தமிழ்மணி, அரவிந்த், மணிகண்டன் & மனோ) சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 10 உணவு பொட்டலங்கள் தயார் செய்து கூடுவாஞ்சேரி சுற்றி உள்ள பகுதிகளில் கொடுத்தோம். 




மார்ச் மாதம் மேலும் சில நண்பர்கள் கை கோர்த்தனர். அன்பு தொண்டு இல்லம், கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவில், திருப்போரூர் முருகன் கோவில் என மாதா மாதம் தொண்டு செய்தோம்.

இந்த பணி கோவில் உழவாரம்  செய்தல், ஆசிரமத்திற்கு உதவுதல் முதியோர் இல்லம் கோசாலை பராமரிப்பு மாத அமாவசை அன்னதானம்,வேதபாடசாலை குழந்தைகளுக்கு உதவுதல் என நீண்டது. இந்த பணியானது  தற்போதும் மிகச்சிறப்பாக பல உறுப்பினர்களுடன் "தமிழ்நாடு ஆன்மீக யாத்திரைக் குழு" என்ற பெயருடன் இயங்கி வருகின்றது.








எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் ஓராண்டு நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.

எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.



"அன்பிற்கும் உண்டோ அடைக்கந் தாழ்"
நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.

வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,

அக மகிழ்கின்றேன் அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!. 

நன்றி .



CELL:-7904386848.

No comments:

Post a Comment