Subscribe

BREAKING NEWS

31 May 2017

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்..



நமது "தேடல் உள்ள தேனீக்கள்" . ராகேஷ் அவர்கள் பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தைகள் மற்றும் யாம்(ரமா சங்கர்) எனது தங்கை மகனுடன் முதலில்  சிங்க பெருமாள் கோவிலில் சந்தித்தோம்பிறகு பாடலாத்ரி நரசிம்மரையும், அகோபிலவல்லி  தாயாரையும் அகம் குளிர தரிசனம் செய்தோம் .பின்னர் அங்கிருந்து மருதேரி செல்லும் பேருந்தில் பயணித்து பிருகு முனிவர் ஆஸ்ரமத்தை  அடைந்தோம்



அங்கே கங்கை கிணற்றையும், நந்தி மற்றும் காமதேனுவையும் கண்டோம்.அங்கு சென்றவுடன் ஆஸ்ரம அன்பர் எங்களை மிக்க அன்புடன் வரவேற்றார்.மற்றொரு அன்பர்  முன்பு போல் மலர்கள் நிறைந்த நீரால் பூஜைக்கு வந்தோர்க்கெல்லாம் பாத பூஜை செய்தார். பின் எங்களை காலை சிற்றுண்டி சாப்பிட அழைத்தார்கள்இந்த முறை விசேஷம் என்னவென்றால், மாப்பிள்ளை சம்பா அரிசிக் கஞ்சியும், அதற்கு இணையாக புதினா துவையலும் சிற்றுண்டியாக பரிமாறினார்கள்அதுவும் மிக மிக சூடாக, கேட்டு கேட்டு உபசரித்தார்கள் . இந்த அரிசியின் மகத்துவம் என்னவென்றால், தொடர்ந்து ஒரு வாரம் உண்டால் உடல் மிக்க வலிமை பெறும் எனவும், இதனை உண்டால் உடலிலுள்ள கெட்ட கழிவுகள் அனைத்தையும் மிகச் சுலபமாக வெளியேற்றி விடும் என்றும் சொன்னார்கள். பூஜைக்கு வரும் அன்பர்களுக்காகவே வெளியூரிலிருந்து வரவழைத்தாகவும் 


தகவலளித்தார்கள்பின்பு நாங்கள் அனைவரும் முதல் தளத்தில் உள்ள பூஜை அறைக்கு சென்று அமர்ந்தோம்அங்கே மகரிஷியின் உருவ படமும், அகண்ட ஜோதி மண்டபமும் மிக அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தனபின் அன்றைய பாம்பாட்டி சித்தர் பூஜை பற்றிய விளக்கங்களை எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். ஆசிரம முறைப்படி அகண்ட ஜோதியையும், திருவிளக்கையும் திரு. அருண் என்கிற அன்பர் ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். திரு. செல்வம் அய்யா பாம்பாட்டி  சித்தரின் மூல மந்திரத்தை எங்களுக்குச்சொல்லி அவர் ஒவ்வொரு முறை சொல்லும் போதும் எங்களையும் திரும்ப சொல்லச்சொன்னார். அப்படியாக இருபத்தியொரு  முறை மூல மந்திரத்தை அனைவரும் கூறினோம். மந்திரம் பின்வருமாறு:


ஓம் கிலீம் ஐம் சௌம் ஸ்ரீம் ஷ்ரீம் ஸ்ரீ சிவபிராபாகர சித்த யோகி ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம....

பிறகு அவர் சம்பந்தப்பட்ட நான்கு வரி பாடல்கள் நூற்றியெட்டு முறையும் ஒவ்வொரு நான்கு வரி பாடலுக்குப்பின் மேற்கூறிய மூல மந்திரம் ஒரு முறையாக அனைவராலும் பாட பெற்றது. இடையினில் குழந்தைகளுக்கான விசேஷ மருந்தும், பெரியவர்களுக்கான விசேஷ மருந்தும் எங்களுக்கு வழங்கப்பட்டது. இப்பாடல்களுக்கு பிறகு அத்தனை சித்தர்கள் பெயரையும் சொல்லி போற்றி ஸ்லோகமும் சொல்லப்பட்டது. பிருகு முனிவரின் காயத்ரி மந்திரமும் ஓதப்பட்டது. பிருகு முனிவர் காயத்ரி மந்திரம் இதோ.:

ஓம் சர்வலோகாச்சார்யாய வித்மஹே  பாத நேத்ராய தீமஹி தந்நோ பிருகு முனிச ப்ரசோதயாத்.

பின் பூஜை முடிந்தவுடன் நாங்கள் அனைவரும் மகரிஷி உருவப் படத்தையும்  அகண்ட ஜோதியையும்  நமஸ்கரித்தோம். பின் பூஜை பிரசாதமாக சூடான பால் வழங்கப்பட்டது. உண்மையிலேயே இந்த பூஜையில் நாங்கள் அனைவரும் ஐக்கியமாகி விட்டோம்.

இதற்குள் மதிய உணவும் தயாராகி விட்டது. பூஜையில் முளை கட்டிய தானியங்களை வைத்திருந்தார்கள்மதிய உணவுடன் தயிர் கலந்து அந்த தானியங்களும் பரிமாறப்பட்டது. முன் போல் வடை பாயசத்துடன் நல்ல விருந்துதான்.


 இயந்திர வாழ்க்கை வாழும் நாமெல்லாம்  நேரம் கிடைக்கும் போது இது போல் பூஜையில் பங்கேற்று சித்தர்களின் அருளினை கண்டிப்பாக பெற வேண்டும். ஆசிரம சுற்று சூழலும் மிக அமைதியாகவும், அழகாகவும் இருந்தது. சிங்க பெருமாள் கோவிலிலிருந்து மருதேரிக்கு தனி பேருந்து இருக்கின்றது. அசிரமத்தை ஒட்டியே பேருந்து நிற்கின்றது. பேருந்தின் நேரம் தெரிந்து போனால் சுலபமாகச்செல்லலாம்.

வாருங்கள் ஒன்று கூடுவோம் மருதேரிக்கு. சித்தர்கள்  அருள் பெறுவோம் கடை தேறுவதற்கு.

பாம்பாட்டி சித்தரே போற்றி !

பிருகு மகரிஷியே போற்றி !

No comments:

Post a Comment