Subscribe

BREAKING NEWS

27 June 2017

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு

அன்பார்ந்த மெய்யன்பர்களே

இந்த வாரத்தின் மகிழ்ச்சியின் தொடக்கமாக நம் TUT குழுவின் உழவாரப்பணி நடைபெற உள்ளது. அவன் அருளாலே அவர் தாள் வணங்கி இரண்டாம் முறையாக உழவாரப் பணி செய்ய இறையருள் கூட்டுவித்துள்ளது. முதல் உழவாரப்பணி யின் அனுபவ பகிர்வும், சதானந்த ஸ்வாமிகள் பற்றியும் இன்றைய பதிவில் காண்போம்.

சித்துக்கள் பல புரிந்த சிறப்பு மிகு சித்தர் வரிசையில் சதானந்த ஸ்வாமிகளுக்கு சிறப்பிடம் உண்டு என்பதில் ஐயமில்லை.  தர்மமிகு சென்னை என்றொரு அடையாளம் சென்னைக்கு உண்டு. தர்மமிகு சென்னையில் பெருங்களத்தூரில் கோவில் கொண்டு,வருகின்ற பக்தர்களின் சங்கடங்கள் தீர்த்து,நல் ஆசி வழங்கி வருகின்றார் சதானந்த ஸ்வாமிகள்.இன்றுள்ள சதானந்த புரமும் அவரின் பெயராலேயே வழங்கப்பட்டு வருகின்றது.

இயற் பெயர் :   காசி நாதன்
அவதரித்த ஊர் : தஞ்சாவூர்

சிறு வயது முதலே இறை நம்பிக்கை கொண்டு வளர்ந்தார். திருவிடைமருதூரில் உள்ள சுயம்பிரகாச சுவாமிகளிடம் தீட்சை பெற்றார்.சதானந்த புரம் உருவாக்க சென்னை வந்து சேர்ந்தார்.இச் சித்தர் தன்னை வெளிக் காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார். சீடன் தயாரானதும் தன் அருள் நிலைகளை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகின்றார்.

சுவாமிகள் தம் காலில் யாரும் விழுந்து வணங்குவதை விரும்ப மாட்டார்.இவருடைய முகம் எப்போதும் பொலிவுடன் காணப்படும்.சுவாமிகள் தம் வழியில் பல சீடர்களை உருவாக்கி,சிலருக்கு ஜீவ சமாதி மூலம் முக்தி அடையும் அருள் வழங்கி உள்ளார்கள் என்பது இவரின் சித்த நிலையை வெளிப்படுத்தும்.நவகண்ட யோகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியவர் நம் சுவாமிகள்.

செம்பாக்கத்தில் உள்ள பொன்னம்பல சுவாமிகள்,புரசைவாக்கம் குயப்பேட்டை ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள்,கரபாத்திர சுவாமிகள்,வீர சுப்பையா சுவாமிகள்,மயிலாப்பூர் குழந்தைவேல் சுவாமிகள் போன்றோருடன் சுவாமிகள் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம சுவாமிகள் கதை (PDF) 






மனிதன் கடைத்தேறுவதற்கு எத்தனையோ வழிகாட்டுதல்களை சடங்குகளை சம்பிரதாயங்களை பிரார்த்தனை முறைகளை, கூறியிருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட சிறப்பும் மகத்துவமும் மிக்கது திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி.

நாம் கேட்பவற்றை தரும் அந்த பரம்பொருளுக்கு இது ஒரு வகையில் நாம் செய்யும் பதில் மரியாதை. மேலும் உழவாரப்பணி என்கிற கைங்கரியத்தை செய்வதன் மூலம் இறைவனை நாம் நமக்கு கடன்பட்டவனாக்கிவிடுகிறோம்.

தீராத தோஷங்களை தீர்க்கும், தீவினைகளை அகற்றும், நவக்கிரகங்களை சாந்தி செய்யும், ஜென்ம ஜென்மங்களாக தொடர்ந்து வரும் பாவங்களை துடைத்தெறியும்…. உழவாரப்பணியின் சிறப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.

ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பெரிய முத்து மாரியம்மன் கோவிலில் 05/06/2016 அன்று உழவாரப் பணி செய்தோம்.









முதலில் நானும்,வம்சியும் இணைந்து விநாயகர் சன்னிதியை சுத்தம் செய்தோம்.பின்பு என் அண்ணன் சந்திரசேகரன் வந்து முருகர் மற்றும் ஐயப்பன் சன்னிதிதியை சுத்தம் செய்தார்.சற்று நேரத்தில் அரவிந்த் & பாலாஜி இணைந்து சிவ பெருமானின் தளத்தை எடுத்துகொண்டு சரபேஸ்வரர்,அன்னை காளிகாம்பாள் சன்னதி என்று ஒரு கை பார்த்து விட்டனர்.

இறுதியாக ஆனந்த் வந்து இணைந்து, கோவிலின் மேற்புறம் இருந்த ஒட்டடை அடித்தார்.

நிகழ்வின் இறுதியாக, அம்மனிற்கு பட்டுடுத்தி வணகினோம்.நம் குழுவின் உறுப்பினர்கள் அனைவரின் பெயரில் அர்ச்சனை செய்து,பிரசாதம் பெற்றோம்.

அவர் அருளாலே ..அவர் தாள் வணங்கி இத்தகைய சிறப்பு மிக்க பணியில்,தன்னை இணைத்து கொண்ட அனைவருக்கும் நன்றி.


அனைவரின் பார்வைக்காக நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வண்ணப்படங்கள்











உழவாரப் பணி மற்றும் கூட்டு வழிபாடு அறிவிப்பு:

ஏவிளம்பி வருட ஆனி மாதசித்திரை நட்சத்திர நாளில் (02/07/2017) ஞாயிற்றுக்கிழமை அன்று நம் குழுவின் சார்பாக உழவாரப் பணி மற்றும் கூட்டு வழிபாடு பெருங்களத்தூர் அருகில் உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் நடைபெற உள்ளது.இறை அன்பர்கள் தங்கள் வருகையை 7904612352 /  96772 67266⁠ எண்களில் உறுதி செய்யவும்.மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்.



அனைவரும் வருக ! இறை அருள் பெறுக !!

சதானந்த சித்தரின் அருள் பெற - முந்தைய பதிவில்


No comments:

Post a Comment