Subscribe

BREAKING NEWS

16 October 2017

நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9)

நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்து விட்டது. இதோ தீபஒளித் திருநாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை, நவராத்திரியின் தரிசனம் இன்னும் நம் மனதுள் உள்ளது. இந்த ஆண்டு நம் தளத்தில் நவராத்திரி பதிவுகள் சிறப்பு பெற்றது அன்னையின் அருளாலே. தீப ஒளித் திருநாளும் அன்னையின் அருள் பெறவே தான். மகாலட்சுமியின் அருள் பெறவே இந்த நன்னாளில் வேண்டுவோம்.

பண்டிகை,விசேஷ நாட்களில் என்ன செய்ய வேண்டும்? அனைத்தும் மறந்து தொலைக்காட்சி பெட்டி முன்பு காலை முதல் மாலை வரை உட்கார்ந்து பொழுது போக்கவா? இல்லவே இல்லை. அன்றாட பணிச் சுமையில் முடியவில்லை என்றாலும், இது போன்ற பண்டிகை,விசேஷ நாட்களில் அருகில் இருக்கும் கோயில்களுக்கு செல்லுங்கள்.உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.கோயில் குருக்களிடம் கேட்டு, இந்த தொண்டில் ஈடுபடுங்கள்.

தொழில்நுட்ப துறையில் வானளாவ  முன்னேற்றம்  பெற்றாலும், நாம் தஞ்சை பெரியகோயில் போன்றோ, ஸ்ரீரங்கம் கோயில்போன்றோ இந்த காலத்தில் நம்மால் ஏன் கட்ட முடியவில்லை. நம் முன்னோர்களின் அறிவை, தொழில்நுட்பத்தை,பண்பாட்டை, கலாச்சாரத்தைக் கண்டு வியக்கின்றோம். 

உடல் ரீதியிலும், மன ரீதியிலும் நம்மை வளர்க்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல கோயிலுக்கு செல்லுங்கள். அண்மையில் நம்மை வியப்படைய செய்ய  வைத்த  வாக்கியம் இது தான்.

ஞானத்தின் உச்சம் பக்தி
பக்தியின் ஆழமே ஞானம்

இது பார்க்க சாதாரணமாகத் தோன்றும் வரிகள் அல்ல. படித்துப் பார்த்து பொருளை அனுபவியுங்கள்.நாம் ஒவ்வொரு முறை ஆலய தரிசனம் செய்யும் போதும், இவை தான் நம் நினைவிற்கு வருகின்றன.

இந்த தீப ஒளி திருநாள் நாம் மட்டும் கொண்டாடும் திருநாள் அன்று. நம்மை சுற்றியுள்ளவர்களும் சேர்ந்து கொண்டாட வேண்டிய நாள். அதற்கு நம்மால் முடிந்த மாற்றத்தை நம்மில் இருந்து துவங்குவோம். சரி ! நவராத்திரி பதிவிற்கு வருவோம்.

நவராத்திரி என்று கேட்டவுடன் கொலு, நாள் ஒரு அம்மன் தரிசனம், அதுவும் நெய்க்குளம் தரிசனம் என்று ஒரு ஆத்மார்த்தமான நவராத்திரி கொண்டாட்டம் இவ்வாண்டு நமக்கு கிடைத்தது. அன்னையின் அருள் சொல்லும் லலிதா  சகஸ்ரநாமம் பற்றியும், கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள அன்னை வழங்கிய தரிசனம் அனைத்தும் ஒருங்கே இங்கே காணலாம்.

உலகெங்கும் அனைத்து ஆலயங்களிலும் பக்திமணம் கமழ ஒலித்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் திருமீயச்சூர்.

பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தீராத தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் தங்களை காத்தருளும்படி அன்னை பராசக்தியை வேண்டினர். அசுரனை அழிப்பதற்காக தேவியானவள், ஒரு வேள்வி குண்டத்தில் இருந்து ஸ்ரீசக்ரத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அரக்கனுடன் கடுமையாக போர்புரிந்து அவனை அழித்தாள். அரக்கனை அழித்த பிறகும் அன்னையின் உக்கிரம் தணியவில்லை.

சிவபெருமான் அன்னையின் கோபத்தை தணிக்க 'மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யும்படி கூறினார். அன்னையும் திருமீயச்சூருக்கு வந்து தவம் செய்து சாந்தமானாள்.

அப்போது அங்கு சாப விமோசனத்திற்காக தவம் இருந்த சூரியன், சிவபெருமான் வர காலதாமதமானதால் 'வகுரா' என கத்துகிறான். 'வகுரா' என்பது திருமீயச்சூர் இறைவனின் பெயர். இது பார்வதிக்கு சினத்தை மூட்டியது. 'சூரியன் ஏற்கனவே பாதிக்கப்பட்டவன்' என்று கூறி பார்வதியை சமாதானப்படுத்தினார் சிவபெருமான். அன்னையின் கோபத்தை தணிக்க, வகினி தேவதைகள் ஆயிரம் திருநாமங்களால் லலிதா சகஸ்ரநாமத்தை பாடினர். இதுவே லலிதா சகஸ்ரநாமம் ஆயிற்று.

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?
=====================================
லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.
லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.

சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு கூறியது:
 ===========================================================
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது.
ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.

யார் யார்க்கு இப்பாக்கியம் கிட்டும் :
===============================
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது " என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன்.
இதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து, ”லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்?”என கேட்க,
அதற்கு ஹயக்கிரீவர்,
“பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்” என்றார்.
அகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள்.

லலிதா சகஸ்ரநாமம் பாராயண பயன்கள் :
=====================================
இது நோய்களைப்போக்கும்.

செல்வத்தை அளிக்கும்.

அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும்.

பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், கிரஹண காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும்.

இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.

லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.
எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகள்:
==================================
சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது.
சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன.

(வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை.)

பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள்.

இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தின் அமைப்பு :
===============================
லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது.

ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்

ஸ்ரீமாதாவின் அவதாரம்
கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)
பண்டாசுர வதம்
மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)
குண்டலினீ ரூபம்
பக்த அனுக்ரஹம்
நிர்க்குண உபாசனை
சகுண உபாசனை
பஞ்சப்ரஹ்ம ரூபம்
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்
பீடங்களும், அங்க தேவதைகளும்
யோகினீ தியானம்
விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்
சிவசக்தி ஐக்கியம்

நாம் ஏன் லலிதா சகஸ்ரநாமம் பற்றி இந்த பதிவில் சொல்ல விரும்பினோம் என்று இப்போது தான் உள்ளுணர்வாக புரிகின்றது. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி அன்று காலை சண்டி ஹோமமும், மாலை குங்கும அர்ச்சனை நடைபெற்றது.இதனை யொட்டி, சுமார் 50 மகளிர் அன்றைய தினம் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். சிலர் ஊர்ப்பக்கம், மறைமலை நகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் போன்ற ஊர்களில் இருந்து வந்து விழாவினை சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னையின் தரிசனத்தை ஒருங்கே காண்போமா?














































































அம்மனின் தரிசனம். நவரசங்கள் தருகின்ற நவ தரிசனம் கண்டீர்கள். எப்படி இருந்தது? இதை விட நமக்கு வேறென்ன வேண்டும்? இதேபோல் மீண்டும் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலய தரிசினமும், அலங்காரமும் ஒருங்கே காண அன்னையிடம் வேண்டுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

நவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (8) - https://tut-temple.blogspot.in/2017/10/8.html

TUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் (7) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-7.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html



No comments:

Post a Comment